மைனர் சிறுமி தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அறிவித்துள்ளது. கருக்கலைப்பு செய்யக்கோரி 12 வயது சிறுமியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. சிறுமியின் வயிற்றில் உள்ள கரு ஏற்கனவே 34 வாரங்களை எட்டியுள்ளதால், கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கருக்கலைப்பு சாத்தியமில்லை என்று நீதிபதி தேவன் ராமச்சந்திரன் பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது. மைனர் சகோதரனுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.