கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் நிறுவனம் இம்மாதம் அதாவது மே மாதம் 30 ஆம் தேதி வரை தங்களது விமானங்களை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. சில செயல்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் இதனால் ஏற்படும் சிரமத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.