இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பணப்பரிவர்த்தனைகள் என்பது அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருவதால் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதில் கிரெடிட் கார்டு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் எச்டிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் தனது சூப்பர் ப்ரீமியம் பிரைவேட் கிரெடிட் கார்டு தவிர அனைத்து கிரெடிட் கார்டுகளிலும் மாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய மாற்றம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது கிரெடிட் கார்டு மூலம் 20000 ரூபாய் வரை செய்யும் ஆன்லைன் செலவு கணக்கு ரிவார்டு புள்ளிகள் மூன்று மடங்கு அதிகரிக்கும். தற்போது இது ஆறு மடங்காக உள்ளது. இந்த வரம்புக்கு கீழே உள்ள பில்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை எனவும் ஒரு சதவீதம் கிரெடிட் கார்டு கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி இந்த வரம்புக்கு மேல் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.