தமிழகத்தில் கனமழை காரணமாக தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இருந்து தொடர்ந்து கன மழை பெய்வதால் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருதி மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாவட்டங்களுக்கே விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.