அரசு பள்ளிகளில் 6 -12 வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2 ஆம் கட்டமாக மேலும் ஒரு லட்சம் மாணவிகளுக்கான உதவித் தொகையை முதல்வர் ஸ்டாலின் நாளை(பிப்,.8) வழங்குகிறார்.

சென்னை பட்டாபிராம் பகுதியில் உள்ள இந்து கல்லூரியில் நடைபெறும் விழாவில் இந்த உதவித்தொகை வழங்குவதை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை புதுமை பெண் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.