ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்தாலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை புறக்கணிப்பதாகவே தெரிகிறது. இரட்டை தலைமை விவகாரம் நேற்று முடிவுக்கு வந்த நிலையில், எடப்பாடி ஆதரவு வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆனால் அந்த நிகழ்வுக்கு பாஜகவினர் யாரும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதோடு நோட்டீஸ், பேனர், போஸ்டர் ஆகியவற்றிலும் பாஜக தலைவர்கள் படமோ, கொடியோ இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.