சென்னை மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க விதிகளுக்கு புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல்.

சூழலிகளுக்கு எதிரான மாநில அரசின் இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது. அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோத போக்கினை காட்டுகிறது. இந்தத் திட்டத்தை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்ட போராட்டம் முன்னெடுக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.