டெல்லியில் மருத்துவ மாணவர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவை சேர்ந்த மருத்துவ மாணவர் மயங்க் கார்க் தேர்வு எழுதுவதற்காக டெல்லி மெட்ரோ ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள். அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.