இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோரோடு வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. ஆனால் ரோகித் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் ஐஸ்வர்யா அவரை விட்டு பிரிந்தார். இதனையடுத்து சங்கர் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

இதனை அடுத்து கடந்த வாரம் தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் ஐஸ்வர்யாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அதிதி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரான பரமேஸ்வரன் youtube சேனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், வழக்கமாக பிரபலமாக இருப்பவர்கள் பையன் எப்படிப்பட்டவன் என்று பார்க்காமல் சொத்தை பார்த்து பெண் கொடுத்தால் இந்த பிரச்சனைதான்.

திருமணத்திற்கு பிறகு ரோகித் மீதும் அவருடைய தந்தை மீதும் 16 வயது பெண் புகார் கொடுத்ததை எடுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள் .அதுமட்டுமின்றி ரோகித் தன் பாலின ஈர்ப்பின் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்ததால் ஐஸ்வர்யா இவரிடம் வாழ முடியாது என்று முடிவெடுத்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பி விட்டார். இரண்டாவதாக திருமணம் செய்ய போகும் தருண் கார்த்திகேயன் கணினி தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்.

ஷங்கருக்கு அட்லி எப்படி பிடித்தமானவரோ அது போல தான் தரும் கார்த்திகேயனும். இதனால்தான் இவர் தன்னுடைய மகளுக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று முடிவு செய்துள்ளார் சங்கர். காரணம் பல கோடி சொத்து வைத்திருந்த ரோகித் எப்படிப்பட்டவர் என்று பார்க்காமல் பெண்ணை கொடுத்து மனவேதனை பட்டாதால் தன்னுடைய ஆயிரம் கோடி சொத்துக்கும் தன் கைக்கு அடக்கமானவராக இருக்கும் தருணை தேர்வு செய்துள்ளார்.