சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் பகுதியில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வசந்தகுமார் என்பவர் அத்துமீறி மூகாட்டியின் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் வசந்தகுமார் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த மூக்குத்தி மற்றும் 2000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றார்.

இதற்கிடையே வசந்தகுமார் தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வசந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வசந்தகுமாருக்கு ஆயுள் தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.