சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். பொதுவாகவே விலங்குகளின் வேட்டை என்பது மனிதர்களே பிரமிக்க வைக்கும். அதிலும் குறிப்பாக முதலை என்றால் மனிதர்கள் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என அனைவருக்கும் தெரியும்.

முதலைக்கு உணவு கொடுக்கும்போது சற்று தூரத்தில் நின்று போட்டால் அது வாயில் கவ்விக்கொண்டு தண்ணீருக்குள் சென்று விடும். ஆனால் தற்போது வெளியாக்கியுள்ள வீடியோவில் நபர் ஒருவர் கையில் முழு கோழியை உணவாக கொடுக்க முயற்சிக்கும்போது எதிர்பாராத விதமாக முதலில் மாமிசத்தை பிடித்த பிறகு மனிதரையும் குறி வைத்து இரையாக்க முயற்சிக்கிறது. உடனே அவரது நண்பர் ஓடி வந்து அவரை காப்பாற்றிய நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.