கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள வடக்கன்சேரியில் 140 குடும்பங்களுக்கு ரூ.18.50 கோடி மதிப்பில் வீடு கட்டும் லைப் மெஷின் திட்டம் நடைபெற்றது. இதில் ரூ.4 கோடி முறைகேடு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையினர் சிவசங்கரிடம் கடந்த மூன்று நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து  மருத்துவ பரிசோதனைக்கு பின் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சிவசங்கர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.