தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் இருப்பதாக இணையதளத்தில் வதந்திகள் பரவி வந்தது. அதன்படி, மும்பையில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. இதனையடுத்து அவர் அங்கே செட்டில் ஆகி விட்டதாகவும் ரூ.70 கோடி மதிப்பில் சொந்த வீடு வாங்கியிருப்பதாகவும் வதந்திகள் பரவி வந்தது.

இந்த நிலையில் சூர்யா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, நடிகர் சூர்யா மும்பையில் செட்டில் ஆகவில்லை என்றும், தங்களின் மகளின் படிப்புக்காக தற்காலிகமாக அங்கு இருப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.