தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. சமீபத்தில் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது தான் கமிட்டாகி இருந்த திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டு ஆறு மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் ஆன்மீகப் பயணம் மற்றும் தோழிகளுடன் சுற்றுலா என செல்லும் சமந்தாவின் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் குஷி திரைப்படத்திற்காக சமந்தா கொடுமையாக உழைத்ததாக விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார். குஷி பட விழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா, படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் சமந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் நிலைமையை புரிந்து கொண்டு சமந்தாவை சில நாட்கள் ஓய்வு எடுக்க சொன்னோம். செப்டம்பர் 1ஆம் தேதி சமந்தாவின் முகத்தில் புன்னகையை பார்க்க விரும்புகிறேன் என்று விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார். வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி குஷி திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.