பிரபலவிஜய் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும்  நீயா நானாவில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார். இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது சில தினங்களுக்கு முன்பு வரதட்சனை கேட்கும் மகள்கள் அவர்களின் பெற்றோர் என்று விவாதிக்கப்பட்ட நிலையில், பெண் ஒருவர் ஆடம்பரமான மண்டபத்தில் தனது திருமணத்தை நடத்தக் கேட்டிருக்கிறார். ஆனால் அந்த  பெண்ணின் தாய் மார்வாடி என்பதால் மிகவும் சிக்கனமாகவே வீட்டில் செயல்படுகின்றார். அவரது மகளும் விட்டில் எந்தவொரு வேலை செய்யாமலும், அவ்வாறு செய்தால் பொருளை உடைத்துவிடுவதுமாய் இருப்பாராம்.  இதனைக் கேட்ட கோபிநாத்  சிரிப்பை தக்க முடியாமல் சிரித்துள்ளார்.