விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகவும் நீயா நானா நிகழ்ச்சியில் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

அதாவது இந்த வாரம் பூர்வ ஜென்மம் இது நம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் இதன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. அதில் முன் ஜென்மத்தில் மரமாக 80 ஆண்டுகள் தனிமையில் இருந்த விஷயம் குறித்து பெண் ஒருவர் பகிர்ந்த நிலையில் அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.