வாழ்க்கையும், தொழில்நுட்பமும் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “முன்பெல்லாம் என்னுடைய தந்தையின் மின்னஞ்சல் முகவரிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவர் பதிலுக்காக 2 நாட்கள் காத்திருப்பேன், “Dear Mr. Pichai, email received. All is well” என பதிலளிப்பார்.

இன்று என் மகன், ஒரு விஷயத்தை பார்த்து உடனே புகைப்படம் எடுத்து தனது நண்பர்கள் உடன் பகிர்ந்து, சாட் செய்வதை பார்க்கும்போது, வாழ்க்கையும், தொழில்நுட்பமும் எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது என வியந்தேன்” என தெரிவித்துள்ளார்.