கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்பலத்துவிளை பகுதியில் ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முன்னாள் ராணுவ வீரரான அனீஷ்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் முகநூல் மூலம் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் அனீஷுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ரேஷ்மா தனது மகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் அனீஷின் தாய் தனது மகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் அனீஷ் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனீஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அனீஷ் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எனது தற்கொலைக்கு நானே தான் காரணம் என எழுதியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.