தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நடிகர் ரஜினி இமயமலை பயணம் சென்றிருந்த நிலையில் அதனை முடித்துவிட்டு லக்னோச் என்ற ரஜினிகாந்த் அங்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தேன் காலில் விழுந்து ஆசை பெற்றார்.

தன்னைவிட இளையவரான யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய ரஜினியிடம் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து கேட்டபோது, வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் யோகிகள் மற்றும் கன்னியாசிகள் காலில் விழுந்து வணங்குவது என் வழக்கம் என்று ரஜினி தெரிவித்துள்ளார்