ஜெயிலர் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் ரஜினிகாந்த் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். அக்டோபர் 2019 வருடம் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.  இமயமலை பயணத்தை முடித்துவிட்டு லக்னோ சென்ற ரஜினிகாந்த் அங்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்றது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து கேட்டபோது, வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுந்து வணங்குவது என்னுடைய வழக்கம் என்று கூறியுள்ளார்.