தமிழகத்தின் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பலரும் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியாமல் தவித்து வருவதால் இது போன்றவர்களுக்கு உதவும் நோக்கத்தில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெரும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மருத்துவ காப்பீட்டின் திட்டத்தில் பயன்பெற மக்கள் இங்கு அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.