முதலமைச்சரின் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ராதன் பண்டிட், கொள்கை முடிவுகள் எடுக்கும் இடங்களில் துறை சார்ந்த வல்லுநர்களும் ஐஏஎஸ் அதிகாரிகளுமே இருக்க வேண்டும் என்ற கடுமையான எதிர்ப்புகள் காரணமாக அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து எழும் அரசியல் விமர்சனங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அவர் இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டார். ஆன்மீக மற்றும் கோவில் சார்ந்த விவகாரங்களில் அவரது அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் என்றும், அங்கு சர்ச்சைகள் உருவாகாது என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், அறநிலையத்துறைக்குள் அவரது தலையீடு அதிகரித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துறை சார்ந்த தினசரி நிர்வாக விவகாரங்கள் மற்றும் முக்கிய கோவில் முடிவுகளில் அவர் தேவையின்றித் தலையிட்டதாகவும், முதலமைச்சரின் நேரடி ஆதரவு எனக்கு இருக்கிறது என்று கூறி அரசு விதிகளை மீறி முடிவுகளை எடுக்க அதிகாரிகளை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி அதிகாரத்தைச் செலுத்த முயன்ற இந்த தீவிர விதிமீறல் தொடர்பான புகார்கள் தலைமைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

“>

 

இதன் தொடர்ச்சியாக, இந்து சமய அறநிலையத்துறையில் அவர் வகித்து வந்த சிறப்பு அதிகாரி பதவி உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகத் தலைமைச் செயலக வளாகம் மற்றும் முக்கிய அரசுத் துறை அலுவலகங்களுக்குள் அவர் நுழைவதற்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.