தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு நேற்று நடிகர் விஜய் கல்வி உதவித்தொகை, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதனைத் தொடர்ந்து மதுரையில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நடிகர் விஜய் கல்விக்காக செய்துள்ள உதவி பாராட்டத்தக்கது. எல்லோரும் அரசியலுக்கு வரலாம்.

இந்த ஜனநாயக நாட்டில் அனைத்து குடிமகனும் அரசியலுக்கு வரலாம். பள்ளியிலேயே 14 வயதிலேயே அரசியல் குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சரத்குமார், 2026க்கு ரொம்ப தூரம் இருக்கு, நாளைக்கு இருப்போமா என்று பார்ப்போம் என்று பதிலளித்தார்.