தளபதி விஜய் நடிகராக மட்டுமல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தை தொடங்கி மக்களுக்காக பணம் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு தொகுதி வாரியாக ஊக்கதொகை வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் நேற்று சென்னை நீலாங்கரையில் மாணவர்களுக்கு ஊக்கதொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

இதில் மூன்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் பரிசு தொகை அளித்துக் கொண்டிருந்தார்அப்போது மாணவியோடு வந்த தாய் ஒருவர் விஜய் ஊக்கதொகை பெற்ற பிறகு விஜய்யிடம்  தம்பி இங்க வாங்க என்று கூப்பிட்டு அவர் நெற்றியில் முத்தமிட்டார். அப்போது நடிகர் விஜய் நெகிழ்ச்சியில் உறைந்து போனார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து விஜய் ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.