நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் வருடம்  நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து  வந்த நிலையில் மோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இந்நிலையில், தனுஷோடு தங்க மகன் படத்தில் நடித்த போது அவரோடு பழகி நெருக்கம் காட்டி வந்ததாக பயில்வான் கூறியுள்ளார். இந்த விஷயமானது அவருடைய கணவர் நாகசைதன்யாவுக்கு தெரிந்து சமந்தாவை விவகாரத்து செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் விவகாரத்துக்கு பின்னரும் அவர்களுடைய லீலைகள் தொடர்ந்து வந்ததாகவும் இது தனுஷினுடைய மனைவி ஐஸ்வர்யாவுக்கு தெரிந்ததால் ரஜினி குடும்பத்தில் மொத்த பேரும் சேர்ந்து எச்சரித்தார்களாம். இதனால் கடுப்பான தனுஷ் ஐஸ்வர்யாவை விவகாரத்தை செய்துவிட்டாராம். மொத்தத்தில் தனுஷின் அந்த ஆசையால் இரண்டு குடும்பம் நாசமாகியது தான் மிச்சம் என்று கூறியுள்ளார் பயில்வான்.