செவ்வந்தி சீரியலின் ஹீரோயின் திவ்யா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியல் ஹீரோ அர்ணாவை சில மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்தார். ஆறு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் திருமணத்திற்கு பிறகு அர்ணவ் செல்லம்மா சீரியல் நடிகையோடு பழகி கொண்டிருக்கிறார் என்றும் அதனால் வீட்டில் பிரச்சனை என்றும் திவ்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மேலும் வேறு ஒரு நடிகையோடு இருக்கும் தொடர்பை கைவிடக் சொன்னதால் தான் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் தன்னை அடித்துக் கொடுமை படுத்துகிறார் என்று திவ்யா கொடுத்த கம்ப்ளைன்ட்டால் அர்ணவ் ஜெயிலில் அடைக்கப்பட்டு பின்பு ஜாமனில் வெளிவந்து சீரியலில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் இவருடைய லீலைகள் ஆடியோவாக வெளியிடப்பட்டு பகீர் கிளப்பி வருகிறது.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த திவ்யாவிற்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் குழந்தையை தூக்கிக்கொண்டு சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் திவ்யா. தற்போது திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தோடு தான் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு தாய் தன்னுடைய குழந்தைக்காக எப்போதும் துணையாக இருப்பார். எதுவாக இருந்தாலும்… என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் இந்த குழந்தை அர்ணவ் போலவே இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.