தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரும் தூங்குவதில்லை அமைச்சர்களையும் தூங்க விடுவதில்லை என்று அமைச்சர் எ.வ. வேலு கலகலப்பாக பேசினார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒவ்வொரு திட்டத்திலும் தொடர் நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்து வருகின்றார். மதுரையில் அமையும் கலைஞர் நூலகம் குறித்து என்னிடம் மட்டுமே 23 முறை கேட்டு உள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.

சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் நியூஸ் வராமல் நாம் தான் தரமாக இருக்க வேண்டும். திட்டங்கள் அனைத்தும் சரியாக செயல்படுத்தப்படுகிறதா அனைத்து வேலைகளும் சரியாக நடைபெறுகிறதா என்று எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் முதல் பஸ் ஸ்டாலின் அவரும் தூங்குவதில்லை அமைச்சர்களையும் தூங்க விடுவதில்லை என்று கலகலப்பாக பேசினார்.