இந்த வருடத்திற்கான தற்காலிக தேர்வு அட்டவணையை டி என் பி எஸ் சி மாற்றியமைத்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு வருடங்களும்கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டன.

தற்போது தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு வருட தொடக்கத்திலும் தற்காலிக தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியலில் சில மாற்றங்களை செய்து தற்போது அப்டேட் செய்துள்ளது. அதனை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.