பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை மின் இணைப்பு பெரும் நபர்களிடம் இருந்து நிறுவல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் பல்வேறு வகையான இணைய சேவைகளை வழங்குகின்றது. இணைய சேவைகள் பைபர் மற்றும் செப்பு இணைப்புகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகள் நாடு முழுவதும் கிடைக்கின்றது.