கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் பண தேவைக்காக பகுதி நேர வேலை செய்கின்றனர். அவர்கள் இனி வாரத்திற்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் 24 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்பட்டது. இதனால் வேலை செய்யும் நோக்கத்தோடு கனடா வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறி அரசு இந்த விதியை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.