மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒருவரையொருவர் தாக்கியும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி நாதக வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து பாட்டுப் பாடி பிரசாரத்தில் ஈடுபட்டார் சீமான்.

அப்போது மேடையில் தொண்டர் ஒருவர் சீமானிடம் ஃசெல்பி எடுக்க முயன்றார். இதனையடுத்து அவரிடமிருந்து செல்போனை பிடுங்கிய சீமான், தொண்டரை பார்த்து “முட்டாபய.. கிறுக்குபய..” என ‘மைக்கில்’ வசைபாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.