வேலூரின் கே.வி.குப்பம் தொகுதிக்குட்பட்ட வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ரகசிய தகவலின் பேரில் ஆய்வு செய்தனர். அப்போது மொட்டை மாடியில் ரூ.2½ லட்சமும், தரைத்தளத்தில் ரூ.4½ லட்சமும் இருந்தது. பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வீட்டில் வசித்து வந்த மூதாட்டி மற்றும் முதியவர் நடராஜனிடம் விசாரித்த போது முதியவர் பதில் அளிக்கவில்லை, மூதாட்டியோ ரூ.4½ லட்சம் தன்னுடையது என கதறி அழுதார். நடராஜன் அமைச்சர் துரைமுருகனின் உறவினர் என தகவல் வெளியாகியுள்ளது.