மும்பையைச் சேர்ந்த சன்ஃபார்மா நிறுவனம் மருந்து உற்பத்தியில் தேசிய அளவில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பாக உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்காக தயாரிக்கப்பட்ட மூலக்கூறு மருந்து குஜராத்தில் சன்ஃபார்மா நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் அந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட மருந்தானது அமெரிக்கா உணவு – மருந்து பொருட்கள் நிர்வாகத்தின் சில பரிசோதனைகளில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து புட்டிகளை அமெரிக்க சந்தையில் இருந்து சன்ஃபார்மா நிறுவனம் திரும்ப பெற உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மருந்தானது நோயாளிகளிடம் சிறிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தினால் திரும்ப பெறுவதாக கூறப்படுகிறது.