கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன்சாந்தி நெய்யாற்றங்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் அவரை உயர் சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்து செல்வதாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, அவர் சற்று சோர்வாக இருக்கிறார். நிமோனியாவில் இருந்து தற்போது அவர் மீண்டு விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நான் அவரை சந்தித்தேன். அவர் பெங்களூர் அழைத்த செல்லப்படுகிறார். அவரது பயணம் மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் மேலிடம் செய்யும் என தெரிவித்துள்ளார்.