தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுவரை அவரின் தற்கொலைக்கான சரியான காரணம் வெளியாகவில்லை.

இந்த நிலையில் மீராவின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் அப்போது அவரின் தாய் பாத்திமா, உன்னை கருவில் சுமந்ததை நினைத்து பெருமை அடைகிறேன், இந்த ஜென்மத்தில் பிரிந்தாலும் அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம் மகளே, என்ன பிரச்சினையாக இருந்தாலும் சொல்லி இருக்கலாமே என்று கதறி அழுதுள்ளார். விஜய் ஆண்டனியும் மீராவின் இறுதி சடங்கு முடியும் வரை அவரின் அழுகையை நிறுத்தவில்லை. இந்த சோகம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.