சென்னை தீவுத்திடரில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ரஜினி சற்று முன் கிளம்பினார். அதற்கு முன்பாக பேசிய அவர், ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் விஜயகாந்த் மிகப் பெரிய சக்தியாக இருந்திருப்பார். உடல்நிலை தேறி வந்து விடுவார் என மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் காலம் அவரை எடுத்துக் கொண்டது. அசாத்தியமான மன உறுதி கொண்டவர் என்று ரஜினி உருக்கமாக பேசியுள்ளார்.