நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில் அனைவரும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்திய வருகிறார்கள்.

இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் விஜயகாந்த் குறித்து விருதாச்சலம் பெண் ஒருவரின் பேஸ்புக் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், விருதாச்சலத்தில் எம்எல்ஏ ஆனவுடன் இலவச கம்ப்யூட்டர் மற்றும் தையல் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்திருந்தார். சினிமாவில் கேப்டனாக பிடித்திருந்தாலும் அப்போது எங்க ஊர் எம் எல் ஏ வாக பார்த்து பேசியது அவர் மீதான பாசம், பிரம்மிப்பை அதிகமாக்கியது. தங்கமான மனுஷன், மிஸ் யூ சார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.