தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மனதை தேற்றிக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டில் அரசியல் போக்கையே மாற்றியவர். எதற்கும் பயப்பட மாட்டார்.

நல்ல மனிதர் என அவரை அடக்கி விட முடியாது. ஆகச்சிறந்த மனிதர். பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் குழந்தை மனம் கொண்டவர். இனி அவரைப் போல் நடிப்பதற்கும் சண்டை போடுவதற்கும் ஆட்கள் வரலாம், ஆனால் அவரைப் போல சிறந்த மனிதராக யாரும் வர முடியாது என உருக்கமாக பேசியுள்ளார்.