மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் தீவுத்திடல் வழியே செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேம்பியர் பாலம் மற்றும் போர் நினைவுச் சின்னம் வழியாக தீவுத்திடல் மைதானத்தின் இடது நுழைவு வாயில் வழியாக செல்லலாம். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி தொண்டர்களின் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் அண்ணா சிலை வரை அனுமதிக்கப்படும். பட்டினம் பாக்கம் கடற்கரை பாதையில் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.