இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்னம் டைரக்டில் உருவாகிய “இருவர்” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஐஸ்வர்யா நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன படம் “பொன்னியின் செல்வன் 2”. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாக ஐஸ்வர்யா ராய்க்கு தெலுங்கு திரைப்படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.

ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆருக்கு திரைத் துறையில் பெரிய பெயர் கிடைத்துள்ளது. இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை வில்லியாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.