கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம். சஹர் பான் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது, கோவில்பட்டி மாவட்ட மின்வாரிய கோட்டப் பகுதியை சேர்ந்த மின்நுகர்வோர்கள், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் சேர்க்கும் சிறப்பு முகாம் இன்று (புதன்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எந்தெந்த பகுதிகளில் நடைபெறும் என்று கொடுக்கபட்டுள்ளது.  இந்நிலையில் இவ்வாய்ப்பினை மின் நுகர்வோர்கள் பயன்படுத்தி, தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணையும்  இணைத்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவில்பட்டி நகர், கிழக்குப் பகுதி திட்டங்குளம், பங்களா தெரு, மேற்கு பகுதி ஆலம்பட்டி, தோணுகால் விலக்கு, வடக்கு பகுதி கோவில்பட்டி, தெற்கு பகுதி கோவில்பட்டி, பாரதி நகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு காம நாயக்கன்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், தாமஸ் நகர், நாலாட்டின் புத்தூர், கயத்தார், கடம்பூர், கீழமங்கலம் ஆகியவற்றிற்கு நாளை 11-ஆம் தேதி (புதன் கிழமை)  நடைபெறும்.

இதையடுத்து கோவில்பட்டி, திட்டக்குளம், பங்களா தெரு, வீரவாஞ்சி நகர், கோவில்பட்டி, சாஸ்திரி நகர், மந்தித் தோப்பு, கழுகுமலை, எட்டயபுரம், லிங்கம்பட்டி, வெயிலுகந்தபுரம் கயத்தாறு, வடக்கு மயிலோடை, பசுவந்தனை ஆகிய இடங்களுக்கு   12-ந் தேதி(வியாழக்கிழமை) நடைபெறும். கோவில்பட்டி, கணேஷ் நகர், கதிரேசன் கோவில் ரோடு கம்மவார் கல்யாண மண்டபம், காமராஜ் நகர், மந்தித்தோப்பு, கழுகுமலை, எட்டயபுரம், கடலையூர், வில்லிசேரி, கயத்தார் டவுன், பன்னீர் குளம், வண்டானம், சோழபுரம் ஆகிய இடங்களில் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.