கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, அங்கு 706 பேர் பாதிக்கப்பட்டோருடன் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் அதிக தொடர்பில் உள்ளவர்களாக அச்சுறுத்தலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நிபா வைரஸால் அங்கு ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்துள்ளனர். உ தொடர்ந்து, கோழிக்கோடு மாவட்டத்தில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ள 7 கிராமங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கேரளாவில் இதுவரை 5 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கேரளாவில் நிபா வைரஸை கட்டுப்படுத்த மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் நிபா வைரஸை தடுக்க தேவையான அனைத்தையும் செய்வோம் என்றும் அமைச்சர் மன்சுக் உதியளித்துள்ளார்.