தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட பின் ஒருசிலர் இணைக்காததால்பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

நாளை மறுநாளுடன் இதற்கான இறுதி அவகாசம் முடிய உள்ளது. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றமும், ஆதாரை இணைக்க தடையில்லை என உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தது.