உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியிலிருந்து மினி வேன் ஒன்று 10 பயணிகளுடன் கைத்தேரி சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மினி வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மினி வேன் கவிழ்ந்ததால் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

மீதம் ஆறு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.