மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில  மாவட்டங்களில் அதி கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கி, வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து மக்களின் நிலை இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே தேங்கிய நீரை வடியவைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு சார்பில் உணவு உள்ளிட்ட நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் உதவி செய்யப்பட்டுள்ளது. தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒரு நாள் ஊதியம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தலைவர் ஆபாஷ் குமார் அறிவித்துள்ளார்.