மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சென்னை தத்தளிக்கிறது. தனியார் நிறுவனங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்துமாறும் அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக பல ஐடி நிறுவனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில்  அடுத்த ஒரு வாரத்திற்கு வீட்டில் இருந்தே வேலை பார்க்க வேண்டும் என ஊழியர்களுக்கு சில தனியார் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்களும் தங்களுக்கு ஊழியர்களுக்கு Work From Home அளிக்க முடிவு எடுத்துள்ளன. மிக்ஜாங் புயல் தீவிரமடைந்து கனமழை வெளுத்து வாங்கி வருவதால் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.