சென்னையை மிக்ஜம் புயல் அடித்து துவம்சம் செய்துள்ளது .இரவு முழுவதும் பெய்த கணம் மழை, தீவிர காற்று காரணமாக சென்னை உருக்குலைந்து போய்விட்டது. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தெருக்களில் ஆறுகளை போல தண்ணீர் அடித்து செல்வதையும் காண முடிந்தது. இடைவிடாது பெய்த மழையால் சென்னையை தத்தளித்தது.

இந்த நிலையில் வாங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் நேற்று காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இது இன்று ஆந்திர மாநிலம் நெல்லூர்க்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.