சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர், எழுத்தாளர்களை நினைவுபடுத்தும் பொருட்டு 6 முதல் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்நிலையில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சங்கமேஸ்வரன் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற சங்கமேஸ்வரனுக்கு பாராட்டு சான்றிதழும், 5 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.