சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் ஏராளமான கோவில்கள் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பழமையான புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் கோவில் பகுதியில் இயங்கி வந்த மதுபான கடைகள் தொடர் போராட்டத்தால் மூடப்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு தனியார் மதுபான கூடம் அமைக்க தடையின்மை சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர்.

ஆனால் அந்த விண்ணப்பத்தை பேரூராட்சி நிர்வாகம் நிராகரித்தது. இருப்பினும் சிலர் தொடர்ந்து தனியார் மதுபான கூடம் அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். எனவே திருப்புவனத்தில் தனியார் மதுபான கூடம் அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தொண்டரணி தலைவரும், திருப்புவனம் பேரூராட்சியின் 15 ஆவது வார்டு உறுப்பினருமான அயோத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.