20 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடனுக்கான செயலாக்க கட்டணத்தை எஸ்பிஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது. பண்டிகை தமாக்கா என்ற பெயரில் மார்ச் 31ஆம் தேதி வரை இந்த சலுகை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ள எஸ் பி ஐ வங்கி, குறைந்தபட்ச மாத வருமானம் 15 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என கூறியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்கள், கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு இந்த கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.